காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களும், லட்சக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள போரூர் ஏரி, சென்னை பெருநகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கு கிறது. கடந்த சில ஆண்டுகளாக அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்ட போதிய இடவசதி மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்காமல் இருந்தமையால் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவு பொருட்களை ஏரியில் கொட்டி எரித்து வருகிறது. தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், போரூர் ஏரி இப்போது குப்பை கிடங்காக மாறிவருகிறது. தண்ணீரும் மாசு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் போரூர் ஏரியின் கரையோரம் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. பயங்கர துர்நாற்றமும் வீசுகிறது. அய்யப்பன்தாங்கல் ஊராட்சியே குப்பை கழிவுகளை ஏரியில் கொட்டி வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போரூர் ஏரியில் 6 ஆழ்துணை கிணறுகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறத...